எனது குழந்தைகள் படிக்கும் பள்ளியில், மூன்று மொழிகள் கற்க வேண்டும். தமிழை மூன்றாவது மொழியாக படிப்பது மிக எளிது. இரண்டாம் மொழியாக படிப்பது சற்று கடினம் (குற்றியலிகரம், குற்றியலுகரம் எல்லாம் வரும்). எனக்கு தெரிந்து முற்றிலும் தமிழ் படிக்காமல் இருக்க முடியும் என்றாலும், அப்படி யாரும் இந்த பள்ளியில் யாரும் இருப்பது போல் தெரியவில்லை.
2009/12/23 செந்தில் குமார் <v.s.senthilkumar@gmail.com>
தமிழ்நாட்டில் எல்லாப் பள்ளிகளிலும், - அரசு உயர்நிலைப் பள்ளி என்றாலும்,
ஆங்கில கான்வெண்ட்டாக இருந்தாலும், தமிழ் கட்டாயமாக ஒரு பாடமாக
இருக்க சட்டம் வேண்டும்.
தமிழ்நாட்டில் பள்ளிக் குழந்தைகள் - தனியார் பள்ளி என்றாலும் - தமிழே
இல்லாமல் படிக்க முடியாது என்னும் நிலையை அரசாங்கம் உருவாக்க
வேண்டும்.
நா. கணேசன்
தமிழ்நாட்டை தனி நாடாக்கி சர்வாதிகாரத்தினையும் அமல் படுத்த வேண்டும். சரி தானே? :-)))
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment