Saturday, December 19, 2009

Re: [தமிழமுதம்] ஜெயபாரதன் உடனடியாக மன்னிபு கேட்க வேண்டும்

என்னங்க இங்க எதுக்கெடுத்தாலும் மன்னிப்பு, பொது மன்னிப்பு என்று மிரட்டுகிறார்கள். இங்கே நடப்பது அரட்டை. அது ஆரோக்கியமாக இருத்தல் அவசியம். 

யாராவது டிராக் மாறி பயணித்தால் உடன் பயணிக்கும் யாரும் அந்த எல்லை மீறுவதை சுட்டிக் காட்டுங்கள் போதும். 

மிக மோசமாக ஒருவர் உரையாடினால் அவரை குழுமத்திலிருந்து நீக்கலாம் அல்லது நாங்கள் இவ்விழையை புறக்கணிக்கிறோம் என்ற ஒற்றைச் சொல்லில் எல்லோரும் அவ்விழைக்கு மூடுவிழா நடத்தி விட்டு வெளிநடப்பு செய்யலாம். 

மன்னிப்பு என்னங்க. அவர் மன்னிப்பு கேட்கனும் இவர் மன்னிப்பு கேட்கனும் என்று சொல்பவர்களே எத்தனையோ இழைகளில் அத்துமீறி விமர்சிப்பதை நான் கண்டிருக்கிறேன். 

பொதுவாக எல்லோரும் இங்கே ஓரளவு படித்த நாகரீகமுள்ளவர்கள் தாம். இன்னொருவர் மனம் புண் படாதவாறு உரையாடுதல் அவசியம். 

தனிப்பட்ட முறையில் யாரையும் இகழ யாருக்கும் உரிமையில்லை. மற்றவர் மதத்தை, கொள்கையை கேவலப்படுத்தாமல் பழகனும், இது மிகவும் அவசியம்.

மன்னிப்பு எல்லாம் யாரும் யாருக்கும் கேட்க வேண்டாம். அது நம்மிடையே உள்ள அன்னியோன்யத்தை கெடுத்துவிடும்.

--

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

         sadeekali@gmail.com
-----------  அ. சாதிக் அலி ----------------
நல் சிந்தனைக் கொள் மனிதா..!

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment