http://groups.google.com/group/tamizhamutham/msg/f720b40c0b91c6c5
On Feb 18, 6:21 am, Abdul Jabbar <abja...@gmail.com> wrote:
> முதல்வருக்குப் பாராட்டு வயிற்றெரிச்சலை கிளப்பத்தான் - துரை முருகன்
> ---------------------------------------------------------------------------------------------------------------------------------
>
> முதல்வருக்கு எத்தனை பாராட்டு விழாக்கள் நடத்தினாலும் தகும் என்று ஒரு
> சாராரும், இது சற்று அதிகமாகவும்
> மலிவாகவும் போய்க் கொண்டிருக்கிறது என்று வேறு ஒரு சாராரும் தர்க்கித்துக்
> கொண்டிருக்க, சட்டத்துறை அமைச்சர் துரை முருகன்,அவருக்கே உரிய பாணியில், ஒரு
> கருத்தை திருவாய் மலர்ந்தருளியுள்ளார். "பாராட்டு விழாக்களை நடத்த, நடத்த
> எதிர்க்கட்சிகள் வயிறெரிவார்கள். அவர்கள் வயிற்றெரிச்சலை மேலும் அதிகப்படுத்த
> மென்மேலும் விழாக்களை நாங்கள் நடத்துவோம்" என்பது தான் அது. இனி முதல்வருக்கான
> பாராட்டு விழாக்களைப் பற்றி யாரும் விமர்சிக்காது இருப்பது உத்தமம்.
>
> ஏனெனில் அத்தைகைய விழாக்களின் நோக்கத்தை துரை முருகன் மிகத் தெளிவாக விளக்கி
> விட்டார். துரை முருகன் ஏன் இப்படிப் பேசுகிறார் என்ற சூட்சுமத்தையும் முதல்வர்
> மேடையிலேயே போட்டு உடைத்து இருக்கிறார். ரஜனி துரைமுருகனைப் பார்த்து, 'நீங்கள்
> (மது) சாப்பிடுவீர்களா... என்ன 'ப்ராண்டு' ? 'ரெட்டா, ப்ளேக்கா...? என்று
> கேட்டாராம். ஏன் அப்படிக் கேட்டார் என்று தெரியவில்லை துரை முருகன் மது
> சாப்பிடுகிறாரா இல்லையா என்பது பற்றி நாம் கவலைப்படத்தேவை இல்லை. அது நம்
> வேலையும் இல்லை. ஆனால் அவர் ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார் என்பது பற்றி இனி
> நாம் ஆச்சரியப் படத் தேவை இல்லை.
>
> ------------------------------------------------------------------------------------------------
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment