Thursday, February 18, 2010

[தமிழமுதம்] Re: கலைஞரின் ஞானோதயம்...!

இதையெல்லாம் நினைச்சுப் பார்த்து எடை போட, மக்களுக்கு நேரம்
இல்லைங்கோ....

யார்ப்பா அங்க, ஏன் அந்த சேனலை மாத்தின? கங்காவோட ரெண்டாவது புருசனுக்கு
என்ன ஆச்சோ? ஏது ஆச்சோ??


On Feb 18, 7:46 am, tamil payani <tamilpay...@gmail.com> wrote:
> தேர்தல் ஆணையம் விழா மற்றும் சில நிகழ்வுகள் மத்திய அரசின்(கூட்டணி) மீது
> ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.  அதான் இந்த இலங்கை தமிழர் நிலைப்பாடு என்று
> எண்ண தோன்றுகிறது..
>
> 2010/2/18 Abdul Jabbar <abja...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > தேவைப் படும்போதெல்லாம் முதல்வருக்குக் கைகொடுக்கும் இலங்கை பிரச்னை
>
> > ---------------------------------------------------------------------------­-------------------------------------------------------------------
>
> > அரசியல் நிர்ப்பந்தங்கள் ஏற்படும் போதெல்லாம் கையில் எடுப்பதற்கென்றே முதல்வர்
> > சில பிரச்னைகளை கை
> > வசம் வைத்திருக்கிறார். ஒன்று மாநில சுயாட்சி, மற்றது இந்தி எதிர்ப்பு.
> > இப்போது மிகச் சௌகரியமாக இலங்கைத்
> > தமிழர் பிரச்னையும் சேர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அரசியல் நிர்ப்பந்தங்கள்
> > ஏதும் இல்லாமலே இப்போது
> > அதை அவர் கையில் எடுத்திருப்பது தான் ஆச்சரியம் தருகிறது. ஒரு வேளை தான்
> > பாராட்டு விழாக்களிலும், உலக
> > செம்மொழி மாநாட்டு விஷயங்களிலும் மூழ்கி மற்றவற்றை மறந்து விட்டதாக மக்கள்
> > எண்ணி விடக்கூடதே
> > என்று நினைத்தாரோ என்னவோ...!
>
> > 'தமிழர்களுக்கு இலங்கை அரசு அதிகார பகிர்வு அளிக்கவில்லை என்றால் திமுக அதை
> > வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது' என்று தனக்கே உரிய பாணியில்
> > சவடால் அடித்திருக்கிறார். அரசியல்வாதிகளை
> > விடுங்கள் அப்பாவி பொதுமக்களே எழுப்பும் கேள்வி என்னவென்றால் இத்தனை காலமும்
> > ஈழத் தமிழர்கள்
> > சொல்லொணா இன்னல்களுக்கு ஆளானபோது திமுக அரசு வேடிக்கை பார்க்காமல் வேறு
> > என்னதான் செய்தது ?
> > செய்யக்கூடிய காரியங்கள் பல இருந்தும், செய்யக் கூடிய இடத்தில் அவர்கள்
> > இருந்தும் சாமர்த்திய அரசியல்
> > நாடகம் ஆடியதைத் தவிர சாதித்தது என்ன..! இந்த திடீர் ஞானோதயத்துக்கு என்ன
> > காரணம் ? எப்போது இங்கே
> > போதி மரம் முளைத்தது..?
>
> > --------------------------------------------------
>
> >  --
> > தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
> > -- பாவேந்தர் பாரதிதாசன்
>
> --
> அன்புடன்,
> சிவா@தமிழ்பயணி
>
> ஆண்டவா உன் பெயரால்,
> நல்லவன் கெட்டதை செய்கிறான், கெட்டவன் நல்லதை செய்கிறான்.- Hide quoted text -
>
> - Show quoted text -

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment