எகத்தாளப் பூணூல்கள்.
================================================ருத்ரா
திரு.சார்லஸ் ஆன்டனி அவர்களே
நகைச்சுவை நடிப்புக்கலைஞர் லூசு மோகன் அவர்கள் முன்
இந்த ஜெயமோகன் ஒரு தூசு மோகன் தான் என்பதை நன்கு விவரிக்கிறது உங்கள்
கட்டூரை.இதைப்போலவே நான் ஒரு கவிதை "திண்ணை" இணைய தளத்தில்
எழுதியிருக்கிறேன்.அது இதொ:...
(சில ஆண்டுகளுக்கு முன் எட்டுந்நூல்கள் எழுதி
ஒரே சமயத்தில் நடத்திய வெளியீட்டு விழா ஏற்புரையில்
கலைஞர் கருணாநிதி,மற்றும் மனுஷ்யபுத்திரன் போன்ற சிறந்த எழுத்தாளர்களை
கொச்சைப்படுத்தி தாக்கினார்.
அப்போது நான் எழுதிய கவிதை இது.
இது "திண்ணை"இணைய தள இதழில் "எட்டு நூல்கள்"
என்ற தலைப்பில் வெளிவந்தது.)
எட்டு நூல்
வெளியீட்டு விழாவில்
ஏதோ
எட்டாத உயரத்து
சாளரத்தில் நின்றுகொண்டு
காக்காய் குருவிகளை
எட்டி பார்ப்பது போல்
ஏற்புரை அருளியிருக்கிறார்
ஜெயமோகன்.
எழுத்து நாகரிகத்தை
எட்டாதவை அவை.
அவரது எட்டு நூல்
ஒன்றும் எட்டுத்தொகை அல்ல.
கொஞ்சம் விட்டால்
சங்க இலக்கியத்தைக் கூட
சாக்கடையில்
வீசிவிடலாம் என்று
ஒன்பதாய்
ஒரு நூல் எழுதிவிடுவார்.
எட்டுத்தொகையை
இவரது 'துட்டுத்தொகையாக்கி '
பரபரப்பாய்
இப்படி ஏதாவது எழுதினால் தான்
அகாடமிக் காரர்களின்
அங்கவஸ்திரம்
இவர்மீது விழும்.
சங்கப்பாடல் பற்றி
இவர் எழுதிய
சில கட்டுரைகள்
இப்படித்தான்
அவசரகோலத்தில்
அள்ளித் தெளிக்கப்பட்டிருந்தன.
இன்று இவர் எழுதியதை
அவர்கள்
அன்றே 'காப்பி யடித்து '
எழுதியதைப்போல் தான்
மிக முறுக்கலோடு
எழுதியிருந்தார்.
அதனால்
கலைஞர் எழுத்துக்களை
காயப்படுத்தி
காச்சு மூச்சு என்று
இவர் எழுதியதில்
ஒன்றும் வியப்பில்லை.
"காலச்சுவடு" இதழில்
வந்த ஒரு
வெளியீடு பற்றி
("நாச்சார் மட விவகாரம்"
எரியீட்டி கொண்டு
நீங்கள் தாக்கியதில்
பச்சை காட்டுமிராண்டித்தனம்
பளிச்சென தெரிந்தது.
அந்த
'நாச்சார் மட ' விவகாரத்தில்
ஏதோ ஒரு தருமிக்கு
பாட்டு எழுதி கொடுத்தது போல்
யாரோ ஒருவருடைய
பேனாவுக்கு
மை ஊற்றிக் கொடுத்து
தன் முகத்தில்
மை ஊற்றிக்கொண்டவர் தானே
இவர்.
இலக்கிய மேதை ஜெயகாந்தன்
பாராட்டு பத்திரத்தில்
இவருக்கு
குடை பிடித்த போதும்,
அந்த குடையும்
கொஞ்சம் கந்தலாகத்தான்
இருந்தது.
'விஷ்ணுபுரத்தில் '
அந்த இறுக்கமான
அதிரடியான
அடாவடிக் கற்பனையான
எழுத்துக்கொத்துகளில்
கதவு திறக்கப்பட முடியாமல்
சிக்கித்தான் கிடந்தது
ஜெயகாந்தன் சொன்னதைப்போல.
சுஜாதா பட்டுக்கோட்டை பிரபாகர்
ராஜேஷ் குமார் பாலகுமாரன்
என்று எல்லோரையும் வைத்து
அரைத்து பண்ணிய அவியல் அது.
எழுத்துக்கு எழுத்து
இடையே உள்ள
இடைவெளிக்குள்
ஒரு 'உருவெளி ' மயக்கத்தின்
(ஹேலூசினேஷன்)
கூட்டுப்புழு தான்
அடைந்து கிடந்தது.
சன்னல் தேடிக்கொண்டிருக்கும்
அவரது மனப்புழுக்கம்
அங்கே மத்தாப்பு கொளுத்தியது.
அதனால்
அவ்வளவும் அங்கே
வெறும் இருட்டு தான்.
அவருக்குள்ளே
தான் ஒரு குமரிக்காரர்
என்ற பெருமிதம்
இருப்பதில் தப்பில்லை.
அதற்காக
மற்ற இலக்கியவாதிகள் மீது
குமுறிப்பாய்ந்து
கூர் நகம் பாய்ச்சி
பச்சை ரத்தம்
பருகத்துடிப்பது
விமரிசன நாகரிகமே இல்லை.
தனக்குள்ளே
ஒரு காழ்ப்புணர்ச்சியுள்ள
மலையாளிக்காரரை
புதைத்து
வைத்துக்கெண்டிருப்பவர் போல்
அல்லவா
புகை கக்குகிறார்.
சங்கீதக்கடல்களான
செம்மங்குடிகளும்
அரியக்குடிகளும்
நிறைகுடமாய்
நின்றிருக்க
கர்நாடக சங்கீதத்தை
வார்த்தையின்
கழைக்கூத்தாடித்தனத்தில்
வெறும் கொட்டாங்கச்சியாக்கி
அதில் நீந்திகளித்த
சுப்புடுகளின் அவதாரத்தில்
கடுப்படிக்க வந்த
இந்த
'கடுப்புடுகளின் '
கர்ண கடூரத்தை
நாம் கவனிக்கத்தேவையில்லை.
இவர் எழுதிக்கொண்டிருக்கும்
'குமரி உலா '
உண்மையில்
ஆச்சரியமான இடங்களின்
நிழற்பட தொகுப்பு என்பதில்
சந்தேகமேயில்லை.
பாவம்
ஃபோட்டோக்களின்
அந்த ஆல்பம்
என்ன செய்யும்.
அதன் மீதும்
இவர் எழுத்துக்கள்
எச்சில் தான் துப்பியிருந்தன.
'ஆன்மீகத்தேடல் ' என்று
எதையோ தேடி
மண்டை காய்ந்து
மல்யுத்தம் செய்திருந்தார்.
அவர் தீட்டிய வர்ணம்
நன்றாகவே அதில் தெரிகிறது.
அவர் யாருடைய தூரிகை
என்று நன்றாகவே புரிகிறது.
நாஞ்சில்காரர்களுக்கு தெரியும்
சர்.சி.பி
எப்படிப்பட்டவர் என்று.
சுதந்திர தீயை
அணைத்துக்காட்ட வந்த
ஒரு சிறந்த ராஜ விசுவாசி அவர்.
ஆனால்
அவர் போட்ட 'கான்கிரீட் '
ரோட்டுக்காக
அந்த 'சர் ' டர்பனுக்கு மேலும்
இவரும்
இன்னொரு கிரீடம்
சூட்டுகின்றார்.
அரசியலுக்காக இலக்கியம்
செய்தவர்களை
இலக்கியவாதிகள் இல்லை
என்று
காலில் போட்டு மிதிக்கும்
இவர்
சுதந்திர உணர்ச்சி எனும்
அரசியலை ஊட்டிய
மகாகவி பாரதியையும்
குப்பைத்தொட்டியில்
எறிவது தானே!
கலைஞருக்கு
துதி பாடியதாக
அந்த சிறந்த எழுத்தாளர்கள் மீது
அதிர்ச்சி அடைந்ததாய்
மூர்க்கத்தனமாய் விமர்சிக்கும்
இந்த முற்றிய எழுத்தாளர்
யாருக்கோ
ஜெய ஜெய என்று
துதி பாடுவது
நன்கு புலப்படுகிறது.
ஆபாசம் என்ற வார்த்தை
வெறும் 'பாலியலை ' மட்டும்
குறிப்பதல்ல.
ஒரு மொழியின் உயிர்ப்பை
அதன் துடிப்பை
கொச்சைப்படுத்துவது கூட
'மொழியியல் ஆபாசம் ' தான்.
புள்ளி ராஜா விளம்பரத்தில்
அந்த நோய் மறந்து போனது.
உறை மட்டுமே
ஊதப்பட்டு பூதம் ஆனது.
ஜெயமோகன் அவர்களே
உங்கள் ஏற்புரை மூலம்
நீங்களும்
'தமிழை ஆபாசபடுத்துவது '
எனும் அந்த பலூனை
பெரிதாய் ஊதியிருக்கிறீர்கள்.
அறிவு ஜீவிகள்
என்று தங்களுக்குள்
முத்திரை குத்திக்கொண்ட
நாலைந்து ஜோல்னாப்பைகளின்
தூக்காணாங் குருவிக்கூடுகளில்
தூங்குவதற்கு மட்டுமே
நூல்களை அச்சிட்டுவிட்டு
ஏதோ எரிமலைகளை
விரலிடுக்கின் சிகரெட்டுகளில்
பற்ற வைத்துவிட்டதாய்
நினைக்கும்
ஜெயமோகன் அவர்களே
உங்கள்மயக்கத்தை
கலைத்துக்கொள்ளுங்கள்.
அவர் குறிப்பிடுகிற
ஆத்மீக தேடலின்
பின்னே
தொடர்ந்து தொடர்ந்து சென்றால்
அதனுடைய
கடைசி மைல்கல்
ராமகோபாலனாய்த்தான்
இருக்கும்.
இவர் எழுத்துகள்
சிந்தனைபூர்வமான நாத்திகத்தை
கொப்பளிக்கலாம்.
புத்தன் தந்த
நாத்திக வாதத்தை வைத்தே
பிரம்ம சூத்திர பாஷ்யங்களை
சங்கராச்சார்யர்கள்
முழக்கம் இடவில்லயா ?
அரசின் செங்கோல்களை யெல்லாம்
துணைக்கு
அருகில் வைத்துக்கொண்டு
எதிர்வாதம் செய்த அறிஞர்கள் எல்லாம்
துண்டு துண்டாய் வெட்டப்பட்டு
கழுகுக்கு இரையாக
வீசப்படவில்லையா ?
விஞ்ஞான வேடமிட்ட
இவருடைய யதார்த்தமும்
தத்துவார்த்த
ஆத்மீக யாத்திரைகளும்
அப்படிப்பட்டது தான்.
சங்க இலக்கியங்களை
சித்திரம் ஆக்கினாலும்
தமிழைச் சித்திரவதை செய்து
ரகசியமாய்
அதை கழுகில் ஏற்ற
அவர் பேனாவை
கூர் தீட்டிக்கொண்டிருப்பது
தமிழுக்கே
பெரும் அபாயம் தான்.
தமிழிலக்கியம்
வெறும் சடலம் என்று
தானே வெட்டியானாகி
மண்வெட்டி
தூக்கிய படலம் தான்
இந்த எட்டு நூல்
அரங்கேற்ற விழா,
மற்றும் பேச்சாளர்களின்
இந்த ஆரோகணம்
அவரோகணம் எல்லாம்.
லா.சா.ரா புடை சூழ
கந்தர்வன் கவரிவீச
இவர் நடத்திய
நூல் வெளியீட்டு விழா
ஒரு சாதனை தான்.
பாவம் அந்த பெரிய எழுத்தாளர்கள்!
தமிழை இருண்ட கண்டத்துள்
தள்ளபார்க்கும்
இவரது நரித்தன நர்த்தனங்களுக்கு
படுதா பிடிக்க
அவர்கள் தான் கிடைத்தார்களா?
பிச்சமூர்த்திகளையும்
புதுமைப்பி த்தன்களையும்
வெற்றிலை போட்டு
குதப்பிக்கொண்டு
அவர்கள் மீதே
காறி உமிழவும்
தயங்காத எழுத்து வித்தகர்.
அவர்
தன்னுடைய
பன்மொழி பாண்டித்தியத்துக்கு
கட்டியம் கூறி
எச்சில் துப்ப
தமிழ் தானா கிடைத்தது.
சில தமிழ் எழுத்தாளர்களை
அவர் விமர்சித்தது
இந்த பாணியில் தான்.
வண்ண நிலவன்களும்
மேலாண்மை பொன்னுச்சாமிகளும்
தொப்பில் முகமது மீரான்களும்
தி.ஜானகிராமன்களும்
கி.ராஜநாராயணன்களும்
சு.சமுத்திரங்களும்
மற்றும் மணிக்கொடி"க்கால சிற்பிகள்
நுழைந்து பார்க்காத
எழுத்தின்
ருசியையும் ஆத்மாவையுமா
இவர் காட்டியிருக்கிறார் ?
எழுத்தாளர்களின்
கர்வம்
அவர்களது
சொந்தக் கிரீடம்.
அதில் நிறைய
காக்காய் இறகுகளை
சொருகிக்கொள்ளட்டும்
நமக்கு கவலைஇல்லை.
விமரிசன எழுத்தாளர்
என்றால்
அந்த கிரீடத்திற்கு அடியில்
கொம்புமா
முளைத்திருக்க வேண்டும் ?
சக எழுத்தாளர்களை
(நயத்தக்க நாகரிக மிக்க
கவிஞர் "மனுஷ்யபுத்திரன்" போன்றோரை)
நொண்டி நாய்
வெள்ளை நாய் என்று
குரூரமாய்
உருவகப்படுத்தியதில்
அவர் இன்னமும்
'கற் காலத்தில் ' தான்
இருக்கிறார்
என்பதை நன்கு காட்டுகிறது.
தன்னிடம்
ஊனமுற்ற சிந்தனையை
வைத்துக்கொண்டு
மற்றவர்களின்
மரக்கால்களைப்பிறாண்டி
இரத்தம் சுவைக்க நினைக்கும்
இந்த பூனைகளா
தமிழ் எழுத்துக்களை
உருத்திராட்சக் கொட்டைகளாக்கி
உருட்ட வந்திருப்பது ?
உள்ளத்தின்
உள்ளுக்குள்
இரண்டாய் பிளந்திருக்கும்
'ஸ்கிசோ ஃபெர்னிய ' வெறியில்
உள்ளுக்குள்
தமிழைத் தாக்க வந்தவர்
வெளியே
தமிழைக் காக்க வந்தவர்போல்
தோரணங்கள் கட்டித்
தொங்கவிட்டுக்கொண்டிருக்கிறார்.
மனத்தளவில்
அவர் ஒரு சக்கரநாற்காலியில்
உட்கார்ந்துகொண்டு
ஒரு சக்கரவர்த்தியின்
வேடம் போட்டுக்கொண்டிருக்கிறார்.
குலேபகாவலி காட்டுவாசிகள்
எலும்புகளை
பிடித்துக்கொண்டு
ஆடுவதைப்போல்
பேனாவை பிடித்துக்கொண்டு
ஆடுவதைத்தான்
அவரது
ஏற்புரை காட்டுகிறது.
இது பொறாமையல்ல.
அவர் குறிப்பிட்டது போல்.
'புலமைக்காய்ச்சல் ' தான்.
ஆனால்
இந்தக் காய்ச்சலின்
வைரஸ் கிருமிகள்
அவரே தான்.
எட்டுக்குழந்தைகள்
ஒரே பிரசவத்தில் வந்ததைப்போல்
எட்டு நூல்கள் ஆச்சரியம் தான்.
எட்டு குழந்தைகளும்
ஒரே தலையில் அல்லவா
ஒட்டிப்பிறந்திருக்கின்றன.
வெறும் தலைக்கனம் மட்டுமே
அந்த எழுத்துக்களின்
கன பரிமாணம்.
தமிழிலக்கிய சிந்தனையாளர்களே!
உங்கள் அறிவாயுதத்தின்
மூலம் தான்
அறுவை சிகிச்சை நடக்கவேண்டும்.
எட்டுநூல் தடபுடல்கள்.....
ஏதோ கைநிறைய என்பார்கள்.
சிரிப்புத்தான் வருகிறது.
கழுதையைக்கொண்டு
வீரத்தமிழினத்திற்கு எதிராக
"அஸ்வமேத" யாகம்
தொடங்கியிருக்கிறீர்கள்.
எட்டுநூல்களில்
பூணூல்களின்
நாகரிகத்தை தான் இன்னும்
முறுக்கிக்கொண்டிருக்கிறீர்கள்.
.
இருப்பினும்
அடைமொழிகளை
முன்னால்
சேர்த்துக்கொள்வதால் மட்டுமே
'ஜெய 'மோகன்கள்
ஜெயகாந்தன்கள்
ஆகிவிட முடியாது.
==========================================================================
ருத்ரா
On Jan 30, 12:15 am, Charles Antony <charles.chr...@gmail.com> wrote:
> http://tamizhanban.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0...
>
> தற்செயலாக படிக்க நேரிட்டது...
> ஜெயமோகனின் எழுத்துக்களைவிட லூசுமோகனின் நகைச்சுவை
> முற்போக்கானது!<http://tamizhanban.wordpress.com/2010/01/27/%e0%ae%9c%e0%af%86%e0%ae%...>
> ஜனவரி
> 27, 2010
>
> *ஜெயமோகனின் எழுத்துக்களைவிட லூசுமோகனின் நகைச்சுவை முற்போக்கானதே!*
>
> * <http://tamizhanban.files.wordpress.com/2010/01/jeyamohan.jpg>
> ஜெயமோகன் குறித்து நான் சொல்வதற்கு முன்பே பலருக்கு அவரது எழுத்தின் தரம்
> என்னவென்று தெரிந்திருக்கும். சமீபத்தில் ஓர்குட் விவாதத்தில் வைக்கம் குறித்த
> ஜெயமோகனின் உளறல்களுக்கு பதில் அளிக்கவேண்டியதன் பொருட்டு ஜெயமோகனின் வலைப்பூவை
> வாசிக்க நேர்ந்தது. வைக்கம் போராட்டம் குறித்து நாம் இதுவரை கேள்விப்பட்டிராத
> கோணத்தில் தனது கற்பனை தட்டிவிட்டதோடு பெரியார் மீதான தனது வன்மத்தை
> வெளிப்படுத்தி இருக்கிறார்.*
>
> *வைக்கம் போராட்டம் குறித்து எழுதிய காந்தி பெரியார் என்ற மனிதரே இல்லாமல்
> பார்த்துக்கொண்டார் இப்பொழுது தன்னை காந்தியின் பக்தர் என்று காட்டிக்கொள்ள
> முயலும் ஜெயமோகனோ பெரியாருக்கு வைக்கம் போராட்டத்தில் பெரிதாய் பங்கில்லை என்ற
> கருத்தாக்கத்தை உருவாக்க முயல்கிறார். பொதுவாக தாழ்ந்தசாதி என்று அழைக்க
> கூடாது தாழ்த்தப்பட்டசாதி என்று அழைக்கவேண்டும் என்று காலம்காலமாக கூறப்பட்டு
> வந்தாலும் ஈழவர்களை தாழ்ந்தசாதி என்று கட்டுரையின் பல இடங்களில் எழுதி தனது
> வன்மத்தையும் தான் யார் என்பதையும் நமக்கு விளக்கி இருக்கிறார்.*
>
> *அதாவது ஜெயமோகன் எப்போது பதிவு போட்டாலும் நேரடியாக அந்தப்பிரச்சனைக்குள்
> போகாமல் சுத்தி வளைத்து அன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா பெரியார் எப்படி
> தெரியுமா? என்றெல்லாம் அவரை பின்பற்றும் ஆட்டுமந்தைகளை சுற்றவிட்டு பின்னால்
> மெதுவாக பூனையை வெளியே எடுப்பார்.*
>
> *அன்று நிறையப்பேர் போராடினார்கள் பலபேர் சிறைசென்றார்கள் அப்படி சிறை
> சென்றவர்களில் பெரியார் தனது மனைவியோடு கைதானார்அவ்வளவுதான் பெரியாரின் வைக்கம்
> போராட்டத்தில் பங்கு அப்பொழுது அவருக்கு வயது வெறும் 45 தான் அப்போது அவர்
> அவ்வளவு பிரபலம் இல்லை பின்னாளில் சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்து செல்வாக்கு
> பெற்றார் அப்படின்னு தனது வழமையான அரைவேக்காட்டுத்தனத்தை முன்வைத்தால் உடனே
> அவரது வாசகர்களான செம்மறியாடுகள் தே'மே' என்று பின்னால் செல்லும்.*
>
> *பெரியார் தனது மனைவியோடு போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானாராம். இதைவிட
> இந்த ஜெயமோகனை நாம் எப்படி அம்பலப்படுத்துவது?. பெரியார் கைதாகி சிறையில்
> அடைக்கப்பட்ட பின்னரே பெரியாரின் மனைவி நாகம்மாள், சகோதரி கண்ணம்மாள் ஆகியோர்
> வைக்கம் விரைந்து வைக்கம் போராட்டத்தை தொடர்ந்து எழுச்சிகுறையாமல்
> நடத்தினார்கள் என்பது வரலாற்று உண்மை.*
>
> *வைக்கம் வீரர் என்று பெரியார் தன்னைத்தானே அழைத்து கொண்டது போலே ஜெயமோகன்
> ரெம்பவும் கவலை கொண்டிருக்கிறார். வைக்கம்வீரர் என்று திருவிக அவர்கள்
> பெரியாருக்கு பட்டம் வழங்கியதும் ஆனால் பெரியார் எப்பொழுதும் தன்னை
> வைக்கம்வீரர் என்று அழைத்து கொண்டதில்லை என்பதையும் நாம் இங்கே
> காணவேண்டும்.வெறும் கடிதத்தின் மூலம் மட்டுமே ஆதரவு வழங்கிய காந்தியை
> முன்னிறுத்தி. நேரடியாக களத்தில் இறங்கி போராடி சிறைசென்று தனது குடும்ப
> பெண்களை போராட்டத்தில் ஈடுபடும்படி செய்த பெரியாரைவிட சூத்திரர் போலே பஞ்சமரும்
> கோவிலுக்குள் செல்லலாம் என்று அறிக்கைவிட்ட காந்தியை முன்னிறுத்துவது எவ்வளவு
> பெரிய அயோக்கியத்தனம் என்று சிந்தியுங்கள்.*
>
> *வைக்கம் போராட்டத்தில் கலந்து கொள்ள பெரியார் கேரளா சென்றபொழுது மன்னர்
> பெரியாரை வரவேற்று அரசு விருந்தினாராக அழைத்த பொழுது தான் போராட வந்திருப்பதால்
> தன்னால் விருந்தினராக இருக்க முடியாது என்று பெரியார் தெரிவித்ததோடு
> தீண்டாமைக்கு எதிராக போராடி சிறை சென்றார் என்பதை நாம் மறந்துவிடமுடியாது.*
>
> * <http://tamizhanban.files.wordpress.com/2010/01/jeyamohan1.jpg>*
>
> *ஜெயமோகனின் லூசுத்தனத்தில் உச்சகட்டம் என்னவென்றால் வைக்கம் வீரர் பெரியார்
> என்றால் கேரளாவில் சிரிக்கிறார்களாம். உங்களை எழுத்தாளர் என்றால் கேரளாவில்
> என்ன செய்கிறார்கள் நீங்கள்தான் சொல்லவேண்டும். 1965 பெரியார் கேரளாவிற்கு
> அழைக்கப்பட்டு பாராட்டப்பட்டார் என்பது ஜெயமோகனுக்கு தெரியாமல் போனது
> ஆச்சரியமே.*
>
> *காந்தி பற்றி நம்மிடம் பல விமர்சனங்கள் உள்ளன ஆனால் காந்தியை பெரியாரோடு
> ஒப்பிட்டு பெரியார் எல்லாம் ஒண்ணுமில்லை தெரியுமா காந்திதான் பெரியாளு தெரியுமா
> என்கிறார். காந்தி வரலாற்று நாயகன் அந்த வரலாற்று நாயகன் வாழ்ந்த காலத்தில்
> பலகுரல்கள் எழுந்தன அப்படி எழுந்த குரல்களில் ஒன்று பெரியார் அவ்வளவே அவர்
> ஒன்றும் மாபெரும் மக்கள் தலைவர் அல்ல என்பதே ஜெயமோகனின் கருத்தாக்கம். பெரியார்
> ஒற்றை குரலாக இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக
> இருந்தார்.புரட்சி என்பது எல்லாவற்றையும் புரட்டி போடுவது. மனிதனுக்கு
> சுயமரியாதையும் பகுத்தறிவையும் போதிப்பது. பெரியார் தான்வாழும் காலம் முழுவதும்
> புரட்சியாளனாக இருந்தார். சாதியின் பெயரால் கட்டமைக்கப்படும் தீண்டாமையை
> எதிர்த்தார். சாதி ஒழியவேண்டும் என்று தொடர்ந்து குரல்கொடுத்து போராடிய தலைவர்
> பெரியார். காந்தியார் வர்ணாசிரம கொள்கைகளை ஆதரித்தார். ஒருவன் தனது குலத்தொழில்
> செய்வதன் பொருட்டு மேன்மை அடையலாம் என்றார் காந்தி அது தவறு என்று பெரியார்
> தொடர்ந்து முழங்கினார்.*
>
> *மேலும் காந்தியை எதிர்த்த பெரியார் காந்தி கொல்லப்பட்ட பொழுது இந்த தேசத்தை
> காந்திதேசம் என்று அறிவியுங்கள் என்றார் இதன் மூலம் பெரியார் கொள்கைகளில்
> உறுதியில்லாத மனிதர் என்கிறார் ஜெயமோகன். ஜெயமோகனின் மேதாவித்தனம் இப்படி
> இருக்கிறது காந்தி தன்வாழ் முழுவதும் பார்பனர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்
> ஒருவேளை காந்தி அதைமீறினால் கொல்லப்படுவார் என்று பெரியார் சுட்டிக்காட்டி
> வந்தார். பார்பனர்களாலேயே காந்தி சுட்டுக்கொல்லப்பட்டபொழுது கொலை செய்த
> பார்பனர்களை தண்டிக்கும் விதமாகவே இந்த தேசத்தின் பெயரை காந்தியதேசம் என்று
> வையுங்கள் அப்பொழுதாவது பார்பனர்கள் விதைத்த சாதியை ஒழியுங்கள் என்கிறார்
> பெரியார். பின்னாளில் ராஜாஜி , "சிலர் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றதைத் தப்பாகப்
> புரிந்து கொண்டு, சாதியே ஒழிய வேண்டுமென்கிறார்கள். காந்தி ஒருக்காலும் சாதி
> ஒழிய வேண்டும் என்று சொல்லவில்லை; சாதி காப்பாற்றப்பட வேண்டுமென்றார்' என்று
> மதுரையில் பேசியதை கண்டு சாதியை ஒழிக்காவிட்டால் காந்தி படத்தை எரிப்போம்
> என்கிறார். காந்தின் பெயரை சொல்லி அரசியல் நடத்துகிறாய் அந்த காந்தியின்
> படத்தை எரிப்பது கண்டாவது சொரணை வந்து சாதியை ஒழிக்க வழியைப்பார் என்கிறார்.*
>
> *பெரியாரின் நோக்கம் யார் மகாத்மா அல்லது யாரை மக்கள் அதிகம்
> பின்பற்றுகிறார்கள் என்று வெங்காயம் உரிப்பதில்லை. பெரியாரின் நோக்கம் சாதி
> ஒழியவேண்டும். ஏற்றத்தாழ்வுகள் நீங்கவேண்டும் என்பதே என்பதை ஜெயமோகன் போன்ற
> இலக்கிய புண்ணாக்குகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லைதான். இப்படியாக ஜெயமோகன்
> ஏதோவொரு இலக்கு நோக்கி எழுதிகொண்டிருக்கிறார். இவரை பின்பற்றும் செம்மறியாட்டு
> கூட்டத்திற்கு இவர்காட்டும் வழி கசாப்புகடையில் சென்று முடிவடையும் என்று
> தெரிவதில்லை.*
>
> *பழைய தமிழ் திரைப்படங்களில் லூசுமோகன் என்ற நகைச்சுவை நடிகரை
> பார்த்திருப்பீர்கள். கண்களை சிமிட்டி கொண்டு குடிகாரர் போன்று சென்னை
> மொழியோடும் வித்தியாசமான உடல்மொழியோடும் நடித்து சிரிப்பு மூட்டுவார்(அவரை ஏன்
> லூசுமோகன் என்று அழைக்கிறார்கள் என்று தெளிவாக தெரியவில்லை). குப்பத்து மொழியை
> அருமையாக உச்சரிப்பார் பாதி வசனம் போசிமுடிப்பதற்குள் மயங்கி சரிந்து விடுபவராக
> வருவார். பிறரை பேமானி கஸ்மாலம் என்று திட்டுவார் தற்போதைய நகைச்சுவைநடிகர்கள்
> போன்று "சண்டாளா!" என்ற சாதி வன்மம் நிறைந்த சொற்களை லூசுமோகன் பேசியதாக
> நியாபகமில்லை. தனக்கென தனியான நகைச்சுவையோட்டமோ, கதையில் லூசுமோகனுக்கென்று
> தனிமுக்கியத்துவமோ கொடுக்கப்படாவிட்டாலும். அவரது நகைச்சுவைக்காட்சிகள்
> பார்பவர்கள் சில நிமிடங்கள் சிரிக்க வைப்போதொடு முடிந்து விடுகிறது. இவரது
> நகைச்சுவை காட்சிகள் யாரையும் புண்படுத்துபவையாகவோ அல்லது தவறாக
> சிந்திக்கவைப்பதாகவோ இருந்ததில்லை.*
>
> *ஜெயமோகன் போன்ற மோசமான பின்விளைவுகளைத்தரும் பின்நவீனத்துவ எழுத்தாளர்களில்
> எழுத்துக்களை விட பல படங்களில் விளிம்பு நிலைமனிதராகவும் குப்பத்து மனிதனாகவே
> நடித்துவிட்டு போன லூசுமோகனின் நகைச்சுவைகாட்சிகள் முற்போக்கானதாகவே தெரிகிறது.
> *
>
> *(பின்குறிப்பு: இக்கட்டுரையில் போடுவதற்காக லூசுமோகனின் புகைப்படத்தை
> தேடித்தேடி அலுத்துவிட்டேன். யாரிடமாவது லூசுமோகன் படம் இருந்தால் அனுப்பி
> வைக்கவும்)*
>
> **
>
> *
> *
>
> --
> நட்புடன்
>
> மழைக்காதலன்http://charlesantony.blogspot.com/http://charlessmiles.blogspot.com/
>
> சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான
> உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி. சாதி, வர்க்க, பாலின, இன
> வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத
> சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்,
> கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல்,
> திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான
> ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment