///////////////////////////////////////////
இங்கிட்டு தமயந்தி அங்கிட்டு யாரு பாகம் 24
Posted: 29 Dec 2009 09:09 PM PST
http://nizhalvalai.blogspot.com/2009/12/24.html?utm_source=feedburner&utm_medium=email
1.ரொம்ப நாளாச்சு பதிவு எழுதி ! மோகன் குமார் அவார்டுலாம்
கொடுத்திருந்தார்.சந்தோஷமா இருக்கு. அப்புறமா எல்லாரும் நல்லா
இருக்கீங்களா( நிசமாலுமே நாங்க பாசக்காரப்பயப்புள்ளங்க தான்.)புது
வருஷம் வரப் போகுது.2009இன் அரசியல் சூழல் கொஞ்சம் கிடுகிடுப்பா தான்
இருந்தது.மாயாவதிக்கு முத்தம் கொடுத்த சஞ்சய் தத் , காங்கிரசுல
சேருங்க சேருங்கனு சொன்ன ராகுல்காந்தினு இப்ப நம்ம திவாரி தாத்தாவோட
அஜால்குஜால் வரைக்கும் ஒரு தமிழ் சினிமாவுக்கான எல்லா அடையாளங்களும்
இதுல இருக்கு.
முடியல..!
2.நேத்து என் பள்ளிப்பருவ ப்ரண்டு சாந்தி என்னைப் பாக்க வந்தா.
தாய்லாந்துலருந்து. சந்தோஷமான நிமிஷம். ஒரு 25 வருஷம் கழிச்சு
பாக்குற சந்தோஷம் காப்பி குடிச்சப்பிறகா ஒரு கசப்பும் தித்திப்பும்
நாக்குல ரொம்ப நேரம் உக்காந்திருக்கணுமே !அது மாதிரி ஒரு
சந்தோஷம்..அம்மு,சித்ரா..நீங்களும் வாங்களேன்!
3.கந்தக்கோட்டை படத்துக்காக நகுல் நிறைய பேட்டி கொடுத்தபடி
இருக்கார். எப்பவுமே நிலையா இல்லாம அங்கிட்டும் இங்கிட்டுமா துடிக்கிற ஆளு
ஏன் அப்படி ஆனார்னா அதுக்கும் ஒரு கதை இருக்கு.அவர் முன்ன குண்டா
இருக்கிறப்ப அவரை யாரும் நிராகரிக்க கூடாதுனா எப்பவும் இப்படி
துறுதுறுனு இருக்கணும்னு தீர்மானிச்சாராம்." எவ்ளோ நேரம் ஒருத்தரோட
இருக்கப் போறோம்..இருக்கிற வரைக்கும் சந்தோஷமா இருக்க வைப்போம்.நாமளும்
சந்தோஷமா இருப்போம்."
நல்லா தான் கீது.!
4.இந்த வருடத்த்துல இரண்டு பேருக்கு நான் நன்றி சொல்லியே ஆகணும்.
கண்ணா,நர்சிம்.
5.நாமளும் ஏதாவது அவார்ட் கொடுக்கலாம்னு ட்ரை பண்ணா....
சிறந்த அரசியல்வாதி ராகுல் காந்தி
சிறந்த இயக்குனர் ஜனநாதன்
சிறந்த எழுத்தாளர் ஆனந் ராகவ்
சிறந்த கவிஞர் மண்குதிரை
சிறந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார்
சிற்ந்த இசையமைப்பாளர் வித்யாசாகர்...நான் மொழி அறிந்தேன் (கண்டேன்
காதலை)...ஏறதாழ ஏழுமணி (பேராண்மை )
சிறந்த ப்ளாக் (சீரியஸ்) சுரேஷ் கண்ணன்
சிறந்த ப்ளாக் (மொக்கை) கார்க்கிபவா
சிறந்த நடிகர் சசிகுமார்
சிற்ந்த நடிகை மதுமிதா (யோகி )
சிறந்த விளையாட்டு வீரர் கிரிக்கெட்ல காம்பீர்
மனசுல தோணுனதை நேர்மையா சொல்லிருக்கேன்..யாரும் கோவிச்சுக்க வேணாம் ப்ளீஸ்!
--
சாந்தி
God loves you because of who God is, not because of anything you did or
didn't do.
http://punnagaithesam.blogspot.com/ =============================
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment