Tuesday, December 22, 2009

Re: [தமிழமுதம்] ஆங் கில வழி கல் விக்கு ஆத ர வாக செயல் ப டும் தமி ழக அரசு : ராம தாஸ் குற் றச் சாட்டு

திரு.மணி அவர்கள் வெறுமே தமிழ்(இந்தியா), ஆங்கிலம்(உலகம்) ஒப்பீடு செய்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். சீனம் உள்ளே வந்து விட்டது.

சீனாவின் பப்பிள் இன்னும் நாலைந்து ஆண்டுகளில் உடையும்.அது அடிப்படையில் உற்பத்தி பொருளாதாரம்.அங்கே ஒயிட்காலர் வேலைகள் அதிகம் உருவாகபோவதில்லை.சீனாவின் ஆறுகளும், சுற்றுபுஇறசூழலும் இப்போதே இந்த உற்பத்தியால் மூச்சுதிணறுகின்றன.மற்றபடி புரியாத மொழி,கலாசாரம், ஜனநாயக் மறுப்பு என இருக்கும் சீனாவில் அவர்களே வலியுறுத்தி கூப்பிட்டாலும் அந்த நாட்டுக்கு போக யாரும் தயாராக இல்லை.

‍மேலே செல்வன் சொன்னதை நானும் ஆ‍மோதிக்கிறேன். தவிரவும் ஆங்கிலம் படிப்பதால்
சீன மக்களுக்கு மக்களாட்சி, சுதந்திரம் என்ற உணர்வுகள் பீரிட்டு (இதென்ன சிட்டு குருவி லேகியமான்னு
கேட்காதீர்கள்) வருவதாக ஏதாவது ஒரு சீனத் தலைவனுக்கு சந்தேகம் வந்து விட்டால் போதும்
சீனர்களின் ஆங்கில கற்கும் வாய்ப்புக்கும் ஆப்பு தான் என்பதில் ஐயமில்லை.

வேறு ஏதேனும் ஓரளவு சுதந்திரம் உள்ள நாடுகளை ஒப்பிட்டு இருக்கலாம். 

அன்புடன்,
சிவா@தமிழ்பயணி


2009/12/22 செல்வன் <holyape@gmail.com>


2009/12/22 Mani Manivannan <mmanivannan@gmail.com>

அடுத்த தலைமுறை அமெரிக்காவுக்குப் பணி புரிய வேண்டுமா, அல்லது தமிழ்நாட்டுக்குப் பணி புரிய வேண்டுமா என்பதில் தெளிவாக இருந்தால் இதற்கு விடை கிடைக்கும்.


எந்த தலைமுறையும் தனக்காக தான் பணீபுரியவேண்டும்.அதாவது தனக்கு எங்கே அதிகம் முன்னேற வாய்ப்புக்கள் உளதோ அங்கே

 
 
சீனக் குழந்தைகள் ஆங்கிலமும் கற்றுக் கொண்ட பின்னர், இந்தியாவின் மென்கலப் பணி ஆளுமைக்குப் போட்டி வந்து விடும்.  நான் பார்த்த வரையில் தாய்மொழியில் கல்வி கற்ற சீனர்கள் ஆங்கிலத்தில் கற்ற இந்தியர்களை விடத் திறமையானவர்கள்.  அவர்களுக்கோ இந்தியர்கள் "நல்ல" ஆங்கிலம் பேசுவதும், எழுதுவதும் வியப்பளிக்கிறது.  அமெரிக்காவில் மேலாள் பதவிகளுக்கு ஆங்கிலப் புலமை அடிப்படைத் தேவை.  தொழில்நுட்ப வல்லமையில் சீனர்கள் சிறந்திருப்பதற்கு ஓர் அடிப்படைக் காரணம் தாய்மொழிக் கல்வி.


அது தவறான கருத்து.அமெரிக்கவாழ் இந்தியர்கள் தான் அமெரிக்காவில் அதிகம் சம்பாதிப்பவர்கள்/படிப்பவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் வருபவர்கள்.

 http://en.wikipedia.org/wiki/Indian_Americans#Statistics_on_Indians_in_the_US

A joint Duke University - UC Berkeley study revealed that Indian immigrants have founded more engineering and technology companies from 1995 to 2005 than immigrants from the U.K., China, Taiwan and Japan combined.[13]

Indians along with other Asians, have one of the highest educational qualifications of all ethnic groups in the US. Thomas Friedman, in his recent book, The World is Flat, explains this trend in terms of brain drain, whereby the best and brightest elements in India emigrate to the US in order to seek better financial opportunities.[

Indian Americans have the highest educational qualifications of all national origin groups in the United States. According to the American Association of Physicians of Indian Origin, there are close to 35,000 Indian American doctors [16]. According to the 2000 census, about 64% of Indian Americans have attained a Bachelor's degree or more.[4](compared to 28% nationally, and 44% average for all Asian American groups). Almost 40% of all Indians have a master's, doctorate or other professional degree, which is five times the national average. (Source: The Indian American Centre for Political Awareness.) These high levels of education have enabled Indian Americans to become a productive segment of the American population, with 72.3% participating in the U.S. work force, of which 57.7% are employed in managerial and professional specialties.[17]

Economics

According to the 2000 U.S. Census, Indian American men had "the highest year-round, full-time median earnings ($51,094)", while Indian American women had a medium income of $35,173.[18] This phenomenon has been linked to the "brain drain" of the Indian intelligentsia from India (source: Journal of Political Economy - University of Chicago Press).


 
இன்னும் இருபது ஆண்டுகள் கழித்துப் பொருளாதாரத்தில் உயர்நிலை வகிக்கப் போவது சீனா.  அமெரிக்காவைப் போல் கதவைத் திறந்து வைத்து வெளிநாட்டுத் திறமையை அவர்கள் வரவேற்க மாட்டார்கள்.  தங்கள் தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் உலகோடு சீனர்கள் பகிர்ந்து கொள்ளத் தயங்குவார்கள்.


சீனாவின் பப்பிள் இன்னும் நாலைந்து ஆண்டுகளில் உடையும்.அது அடிப்படையில் உற்பத்தி பொருளாதாரம்.அங்கே ஒயிட்காலர் வேலைகள் அதிகம் உருவாகபோவதில்லை.சீனாவின் ஆறுகளும், சுற்றுபுஇறசூழலும் இப்போதே இந்த உற்பத்தியால் மூச்சுதிணறுகின்றன.மற்றபடி புரியாத மொழி,கலாசாரம், ஜனநாயக் மறுப்பு என இருக்கும் சீனாவில் அவர்களே வலியுறுத்தி கூப்பிட்டாலும் அந்த நாட்டுக்கு போக யாரும் தயாராக இல்லை.

 
 
அமெரிக்கா தற்போது இறங்குமுகமாக இருக்கிறது.  இந்தச் சரிவை அமெரிக்கர்கள் நிறுத்தி விட்டாலும், கதவுகளை எவ்வளவு நாள் திறந்து வைப்பார்கள் என்பது கேள்விக் குறி.


உலகம் மிக பெரியது.கையில் வித்தை இருந்தால் புவனம் முழுவதும் வாசலை ஒருவனுக்கு திறந்து வைக்கும்.இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியாவே அமெரிக்கா, சீனாவை மிஞ்சும் வகையில் வளரலாம்.வெளிநாடு போகும் அவசியமே வராது
 
 
தமிழர்களுக்குத் தற்போதைக்கு ஆங்கிலம் நல்ல வாய்ப்புகளைத் தருகிறது என்பதில் ஐயமில்லை.  ஆனால், இத்தகைய வாய்ப்புகள் வருங்காலத்திலும் வெகு குறைவான ஆட்களுக்கு மட்டுமே இருக்கும்.  ஆறு மாதத்துக்குள் ஆங்கிலத்தை எழுத, பேசக் கற்றுக் கொள்ளலாம்.  ஆனால், அடிப்படைக் கல்வி அப்படியல்ல.


ஆறு மாதத்தில் ஆங்கிலம் கற்றுகொண்டு அமெரிக்கா போய்விடலாமா?ஜோக்கா?:))

அடிப்படை கல்வியை ஆங்கிலத்தில் படித்தால் எந்த பிரச்சனையும் கிடையாது.தமிழில் படித்தால் நடுவே பெற்றோருக்கு வேறு மாநிலத்தில் மாற்ரலாகி போனால் சற்று சிக்கல்.அப்படி மைக்ரேஷன் ஆகும் வாய்ப்புகள் இல்லையென்றால் அடிப்படை கல்வி எந்த மொழியில் படித்தாலும் பிரச்சனையில்லை
 
 
மக்களுக்குத் தேவையானவை எவை, தம் சூழலில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது எப்படி என்பது போன்ற சிந்தனைகளுக்கு ஆங்கிலக் கல்வி மற்றும் போதாது..


ஏன் போதாது?எந்த மொழியில் கற்றாலும் அறிவு வளரத்தான் செய்யும்.
 
ஐ.ஐ.டி. கழகங்களில் போட்ட முதலீட்டில் இந்தியாவுக்கு எவ்வளவு லாபம், அமெரிக்காவுக்கு எவ்வளவு லாபம்?


இந்தியர்களுக்கு அதில் லாபம்.ஐ.ஐ.டி இயங்குவது இந்தியர் நலனுக்கு.அதில் படித்த இந்தியர் வாழ்க்கையில் நன்கு முன்னேறினார்கள்.ஆக அது தன் குறிகோளை எட்டிவிட்டது.

 
 
தனியார் பள்ளிகள் சந்தைக்கு ஏற்ப எப்படி வேண்டுமானாலும் செயல்படட்டும்.
 
அரசுப் பள்ளிகளும், அரசு மானியப் பள்ளிகளும், தமிழ்நாட்டின் வருங்காலத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


மாணவர்களின் வருங்காலம்?..தனியார் பள்ளிகள் மாணவர்களின் வருங்காலத்தை கவனத்தில் கொள்கின்றன.அரசு பள்ளிகள் அரசு இயந்திரத்தின் வருங்காலத்தை கவனத்தில் கொள்கின்றன
 
 
இணையம் எழுவதற்கு முன்னர் தமிழ் சோறு போடுமா என்ற கேள்விகள் இருந்தன.  இப்போது இணைய வாணிகர்கள் பலருக்குத் தமிழ் சோறு போட்டுக் கொண்டிருக்கிறது.
 
இன்றும் சன் டிவி கொடி கட்டிப் பறப்பதற்கு ஒரே காரணம் - தமிழ்.
 
அதை மாறன் மறந்திருக்கலாம்.  மர்டாக் மறக்கவில்லை.




தமிழ்நாட்டில் தமிழ் பயன்படும் என்பது மறுக்க இயலாத உண்மை.தமிழ்நாட்டில் மட்டும் அத்தனை வாய்ய்ப்புக்கள் இல்லை என்பதும் உண்மை.

--
செல்வன்

www.holyox.tk

"This is America.We don't redistribute wealth.You earn it"

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
யாதும் ஊரே..!! யாவரும் கேளிர்...!!!

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment